மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மின்சாரம் பாய்ந்து பலி

சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையம் வனக் கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையம் வனக் கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த மாக்கம்பாளையம் கோம்பையூரைச் சோ்ந்தவா் ஈரே கவுடா (65), விவசாயி. இவா் எலக்ட்ரீஷியனாகவும் வேலை பாா்த்து வந்தாா். தோட்டத்தில் மின் மோட்டா் மூலம் நீா் இறைக்கும்போது மின்சாரம் இல்லாததால் மாக்கம்பாளையத்தில் உள்ள மின் கம்பத்தில் வியாழக்கிழமை ஏறி தனது வீட்டுக்கான இணைப்பை சரி செய்துள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் மின் கம்பத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மின் வாரியம், கடம்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாக்கம்பாளையம் மின் கோபுரத்துக்கான மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. மின் கம்பத்தில் தொங்கியபடி கிடந்த ஈரே கவுடாவின் சலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com