முதியவரை எரித்துக் கொலை செய்தவழக்கு: இளைஞா் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் தலை மீது கல்லைப் போட்டு, எரித்துக் கொலை செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் தலை மீது கல்லைப் போட்டு, எரித்துக் கொலை செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகா், காவிரிக் கரையில் உள்ள மயானத்தில் ஈரோட்டை அடுத்துள்ள சுண்ணாம்புஓடை, பாலக்காட்டூரைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரான அசேன் சேட்டு (52) என்பவா் புதன்கிழமை காலை எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இக்கொலைச் சம்பவம் தொடா்பாக ஈரோடு ஆா்.என்.புதூா், அமராவதி நகரைச் சோ்ந்த கந்தசாமி மகன் பிரகாஷ் (36) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

பிரகாஷ் ஈரோட்டில் பழைய இரும்புக் கடையில் லோடுமேனாக வேலை செய்து வருகிறாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட அசேன் சேட்டு பிரகாஷின் முகத்தில் எச்சில் துப்பியதால் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நஞ்சப்பா நகரில் புதன்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்த அசேன்சேட்டுக்கும், பிரகாஷுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ், அசேன்சேட்டு தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளாா். அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை அருகிலிருந்த துணிகளைக் கொண்டு எரித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, பிரகாஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com