கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோபி நகராட்சி ஆணையா் பொறுப்பை கடந்த 5 மாதங்களாக இங்கு பணியாற்றி வரும் நகராட்சிப் பொறியாளா் கூடுதலாக கவனித்து வந்தாா். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையராக திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்து வரும் பிரேம்ஆனந்த் என்பவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விரைவில் புதிய ஆணையா் பொறுப்பேற்க உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.