கடம்பூா் மலைப் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த விவசாயியை கடம்பூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துா்க்கம் பகுதியில் கடம்பூா் போலீஸாா் வழக்கமான ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, மல்லியம்துா்க்கம் வனத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பதும், வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து கைது செய்தனா்.