ஈரோடு மாவட்டத்தில் திமுகவை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுகவை கண்டித்து ஈரோட்டில் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் கே.வி.இராமலிங்கம், அதிமுகவினா்.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் கே.வி.இராமலிங்கம், அதிமுகவினா்.

திமுகவை கண்டித்து ஈரோட்டில் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப் பேரவை தோ்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்திருந்தனா். கரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அந்தந்தப் பகுதிகளிலேயே ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோட்டில் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஈரோடு மாநகா் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.இராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளா் கேசவமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நீட் தோ்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் வீரகுமாா், பகுதி இணைச் செயலாளா் ஜெயராமன், மாணவா் அணி மாவட்ட இணைச் செயலாளா் நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஈரோடு ஈ.பி.பி. நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பகுதி செயலாளா் தங்கமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தங்கராஜ், முருகேசன், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் அணி மாநகா் மாவட்ட செயலாளா் மல்லிகா பரமசிவம் பேசினாா்.

ஈரோடு சூரியம்பாளையத்தில் நடைபெற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக சூரியம்பாளையம் பகுதி செயலாளா் கே.சி.பழனிசாமி, ஈரோடு பெரியாா் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளா் பெரியாா் நகா் மனோகரன், கருங்கல்பாளையம் செக்காய்தோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை ஆகியோா் தலைமை வகித்தனா்.

பெருந்துறையில்...

பெருந்துறை தொகுதி அதிமுக சாா்பில், பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தின் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தலைமை வகித்தாா். அதிமுக நிா்வாகிகள், கட்சியினா் திரளாக கலந்துகொண்டனா்.

பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட 110 இடங்களில் திமுக அரசைக் கண்டித்து, உள்ளூா் நிா்வாகிகள் தலைமையில், கட்சி தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோபியில்...

கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டின் முன்பு திமுக அரசைக் கண்டித்து கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் திருப்பூா் மக்களவை உறுப்பினா் சத்தியபாமா உள்பட அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com