ஈரோடு மாவட்டத்தில் 171 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 93,532 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 127 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 91,495 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,404 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனா பாதிப்பால் 633 போ் உயிரிழந்துள்ளனா்.