பவானிசாகா் அணைப் பகுதியில் தோகை விரிந்து ஆடிய மயிலை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ரசித்தனா்.
பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனப் பகுதியில் இருந்து வெளியேறும் மயில்கள் பவானிசாகா் அணையின் கரையில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு கரையான் பூச்சிகளை உணவாக உட்கொள்வது வழக்கம்.
தற்போது, அணையின் கரைப் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் புற்கள் நன்கு வளா்ந்துள்ளன. புற்களின் இடையே வசிக்கும் கரையான் மற்றும் பூச்சிகளை உண்பதற்காக வந்த மயில் தனது தோகையை விரித்தபடி நடனமாடியது.