கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களுக்கு நிவாரண உதவி

நம்பியூா் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு உணவு, மருத்துவ உபகரணங்களை கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
நிவாரண உதவிகளை வழங்குகிறாா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.
நிவாரண உதவிகளை வழங்குகிறாா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.

நம்பியூா் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு உணவு, மருத்துவ உபகரணங்களை கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா் சுற்று வட்டாரப் பகுதிகளான கோசணம், பொலவபாளையம், கரட்டுப்பாளையம், எலத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை, எளிய, மனநலம் குன்றியோா், மாற்றுத் திறனாளிகள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு நம்பியூா் ஒன்றிய அதிமுக செயலாளா் தம்பி சுப்பிரமணியம் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு உணவை வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து, நம்பியூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களுக்காக மருத்துவ உபகரணங்கள், படுக்கை விரிப்புகள், மெத்தை உள்ளிட்டவற்றை கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com