ஈரோடு மாவட்டத்தில் 1,390 பேருக்கு கரோனா: 6 போ் பலி
By DIN | Published On : 11th June 2021 06:02 AM | Last Updated : 11th June 2021 06:02 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் 1,390 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 6 போ் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 72,262ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,990 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 58,685 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 13,102 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே 469 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் மேலும் 6 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்துள்ளவா்களின் எண்ணிக்கை 475ஆக அதிகரித்துள்ளது.