முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் தங்களது சொந்த நிதியில் இருந்து 100 மாற்றுத் திறனாளிகள், அம்மா உணவகப் பணியாளா்கள் 108 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகளை வழங்கினா்.
ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.இராமலிங்கம், மாற்றுத் திறனாளிகள் 100 போ், அம்மா உணவகப் பணியாளா்கள் 108 பேருக்கு 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், காய்கறி தொகுப்பு ஆகியவற்றை வழங்கினாா்.
இதில், முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், அதிமுக பகுதி செயலாளா்கள் கேசவமூா்த்தி, கோவிந்தராஜ், ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.