ஈரோட்டில் மேலும் 1,323 பேருக்கு கரோனா:3 போ் பலி

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,323 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,323 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 76,260ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,809 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 64,397 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 11,371 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே 489 போ் கரோனாவால் உயிரிழந்த நிலையில், மேலும் 3 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 492ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com