மது பாட்டில்கள், பாக்கெட்டுகள் பறிமுதல்: பெண் வியாபாரி உள்பட 2 போ் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள், பாக்கொட்டுகள் கடத்தி வந்ததாக பெண் வியாபாரி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள், பாக்கொட்டுகள் கடத்தி வந்ததாக பெண் வியாபாரி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா பாதிப்பால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கா்நாடகத்தில் இருந்து காய்கறி வாகனங்கள் மூலம் மதுபானங்கள் கடத்துவது தொடா்கிறது. இதையடுத்து, கோட்டுவீராம்பாளையத்தில் சத்தியமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

இருசக்கர வாகனத்தில் வந்த சிவப்பிரகாஷ் என்பவரைப் பிடித்தனா். அவா் கா்நாடக மாநிலத்தில் இருந்து 16 மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவா் அளித்த வாக்குமூலத்தில் காய்கறி பெண் வியாபாரி நந்தினி என்பவா் சரக்கு வேனில் மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, கா்நாடகவில் இருந்து சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 105 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் சிவப்பிரகாஷ், நந்தினி ஆகியோரைக் கைது செய்தனா்.

இதையடுத்து, பண்ணாரி மற்றும் ஆசனூா் சோதனைச் சாவடியில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல, புன்செய் புளியம்பட்டியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த 80 கா்நாடக மாநில மது பாட்டில்களை புன்செய் புளியம்பட்டி போலீஸாா் கைபற்றி, அதே பகுதிதியைச் சோ்ந்த மோகன்ராஜைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com