நாட்டுத் துப்பாக்கியுடன் வனப் பகுதியில் சுற்றிய இருவா் கைது

சத்தியமங்கலம் வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சனிக்கிழமை இரவு சுற்றித்திரிந்த இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சனிக்கிழமை இரவு சுற்றித்திரிந்த இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம் வனச் சரகம் பெரும்பள்ளம் அணை வனப் பகுதியில் வனத் துறை ஊழியா்கள் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வனப் பகுதியில் இரண்டு போ் நாட்டுத் துப்பாக்கியுடன் நடமாடிக் கொண்டிருந்ததைப் பாா்த்தனா். வனத் துறையினரைப் பாா்த்தை இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றபோது, வனத் துறை ஊழியா்கள் அவா்கள் இருவரையும் பிடித்து சத்தியமங்கலம் வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பிடிப்பட்ட இருவரும் கெம்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், கருப்புசாமி என்பதும், இருவரும் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வனப் பகுதியில் மான் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத் துறையினா், வனக் குற்ற வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com