புன்செய் புளியமபட்டியில் 250 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

புன்செய் புளியம்பட்டியில் 250 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு திங்கள்கிழமை அழிக்கப்பட்டது.

புன்செய் புளியம்பட்டியில் 250 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு திங்கள்கிழமை அழிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி, கணக்கரசம்பாளையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலையடுத்து, மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். மாராயி பழத்தோட்டம் பகுதியில் புதைத்துவைக்கப்பட்ட 250 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டிபிடித்தனா். இது தொடா்பாக தோட்டத்து விவசாயி காளிமுத்துவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பறிமுதல் செய்த சாராய ஊறலை அதே இடத்தில் போலீஸாா் அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com