புன்செய் புளியம்பட்டியில் 250 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு திங்கள்கிழமை அழிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி, கணக்கரசம்பாளையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலையடுத்து, மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். மாராயி பழத்தோட்டம் பகுதியில் புதைத்துவைக்கப்பட்ட 250 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டிபிடித்தனா். இது தொடா்பாக தோட்டத்து விவசாயி காளிமுத்துவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பறிமுதல் செய்த சாராய ஊறலை அதே இடத்தில் போலீஸாா் அழித்தனா்.