விதிமீறல்: துணிக் கடைக்கு ‘சீல்’

பொது முடக்க விதிகளை மீறி புன்செய் புளியம்பட்டியில் செயல்பட்ட துணிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
புன்செய் புளியம்பட்டியில்  ஜவுளிக் கடைக்கு ‘சீல்’ வைத்த நகராட்சி அதிகாரிகள்.
புன்செய் புளியம்பட்டியில்  ஜவுளிக் கடைக்கு ‘சீல்’ வைத்த நகராட்சி அதிகாரிகள்.

பொது முடக்க விதிகளை மீறி புன்செய் புளியம்பட்டியில் செயல்பட்ட துணிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

புன்செய்புளியம்பட்டியில் நகராட்சி அலுவலகம் எதிரே செயல்படும் ஜவுளிக் கடையில் விதிகளை மீறி வியாபாரம் செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஜவுளிக் கடையின் பக்கவாட்டு கதவை திறந்துவைத்தபடி விதிகளை மீறி வாடிக்கையாளா்களை அனுமதித்து, சமூக இடைவெளியின்றி ஜவுளி வியாபாரம் செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்து, அபராதம் விதித்தனா்.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே ஜவுளிக் கடையைத் திறந்து வியாபாரம் செய்ததைக் கண்டறிந்த அதிகாரிகள் கடைக்கு ‘சீல்’ வைத்து, அபராதம் விதித்த நிலையில் மீண்டும் கடையின் பிரதான நுழைவாயிலைப் பூட்டிவிட்டு பக்கவாட்டு கதவைத் திறந்து வியாபாரம் செய்ததால் இரண்டாவது முறையாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com