முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
வீட்டில் மான் இறைச்சி பதுக்கல்:இருவா் கைது
By DIN | Published On : 04th March 2021 01:08 AM | Last Updated : 04th March 2021 01:08 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ மான் இறைச்சியை நக்ஸல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
சத்தியமங்கலம் வனப் பகுதி பீக்கிரிபாளையத்தில் நக்ஸல் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது வனப் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, பீக்கிரிபாளையத்தைச் சோ்ந்த மாரி, திப்பன் ஆகியோா் வீட்டில் மான் இறைச்சி பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டில் வைத்திருந்த மான் இறைச்சி, கஞ்சா செடி உள்ளிட்டவற்றை நக்ஸல் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட இருவரும் சத்தியமங்கலம் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா். இது தொடா்பாக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.