பெருந்துறையில் மண்டல அலுவா்களுக்குத் தோ்தல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இப்பயிற்சியில், பெருந்துறை சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட 1 முதல் 28 மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், பெருந்துறை வட்டாட்சியருமான எஸ்.காா்த்திக் பயிற்சி வகுப்புகளை நடத்தினாா்.
இதில், மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் 78 போ் கலந்துகொண்டனா்.