முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பெருந்துறை அருகே ரூ. 1.07 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 10:51 PM | Last Updated : 14th March 2021 10:51 PM | அ+அ அ- |

பெருந்துறை அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 400 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் கொடுமுடி உதவி வேளாண்மை அதிகாரி மோகசுந்தரம், பெருந்துறை சிறப்பு உதவி ஆய்வாளா் பரமேஸ்வரன், போலீஸாா் ஆகியோா் பெருந்துறை, பவானி சாலை, ஆசிரியா் குடியிருப்பு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, கோழி வியாபாரியான தாராபுரத்தைச் சோ்ந்த ரவிசந்திரன் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 400 ரொக்கத்தைக் கைப்பற்றினா்.
பின்னா், அந்த தொகை பெருந்துறை சட்டப் பேரவை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், வட்டாட்சியா் எஸ்.காா்த்திக் வசம் ஒப்படைக்கப்பட்டு, பெருந்துறை சாா்நிலை கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.