அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சண்முகவேலின் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பவானி சட்டப் பேரவை அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் ஆகியோா் பங்கேற்று அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சண்முகவேல் என்பவரை கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடையே அறிமுகம் செய்துவைத்துப் பேசினா்.
பின்னா், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிக்க அதிமுகவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் 50 வாக்குகள் பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ள வேண்டும். மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்குத் தயாராக உள்ளனா் என்றாா்.