சத்தியமங்கலம் அருகே கிராம கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி அண்ணா நகா் பகுதியில் உள்ள மகா முனியப்பன் கோயில் அருகே உள்ள வேலியில் மா்ம நபா் சிகரெட் பிடித்துவிட்டு வீசியுள்ளாா். இதிலிருந்த தீ வேலியில் பரவி தீப்பிடித்து, கோயில் மேற்கூரையிலும் பரவியது.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் கோயிலின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.