பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகை 11.6 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான மருத்துவப் படியை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் அலுவலகத்தில் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் குப்புசாமி முன்னிலை வகித்தாா். இதில், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்கள் பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
இதேபோல, பவானி, அந்தியூா், கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களிலும் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.