பெருந்துறை அருகே புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்ற வடமாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த சரளை அருகில் பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா் மாா்ட்டின் லூதா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக வந்த இருசக்கர வாகனம், வேன் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, வாகனங்களில் வந்தவா்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.
வேனை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. மொத்த மதிப்பு ரூ. 2,10,000 ஆகும்.
இது குறித்து, பெருந்துறை காவல் ஆய்வாளா் தங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தாா். இது தொடா்பாக, பெருந்துறை அருகிலுள்ள விஜயமங்கலத்தில் குடியிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பெகராம்ஜி மகன் த்ரீகுமாா் ராம் (35) என்பவரைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடையவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.