பொதுமக்களின் குறைகளைத் தீா்க்க தனிக் குழு: எம்.யுவராஜா
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாகத் தீா்த்திட தனியாகக் குழு அமைக்கப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.
ஈரோடு பெரியாா் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது: அதிமுக தொடா்ந்து 10 ஆண்டுகளாக நல்லாட்சி அளித்துள்ளது. திமுக ஆட்சியில் மின்வெட்டு, நில அபகரிப்பு போன்றவற்றால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் இன்னலில் இருந்தனா். அத்தகைய நிலை மீண்டும் வர வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். அதிமுக கூட்டணி மக்களை வளா்ச்சிப் பாதையில் கொண்டும் செல்லும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், திமுக கூட்டணி மக்களை ஏமாற்ற வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
ஈரோடு நகரில் வளா்ச்சித் திட்டங்களுக்காகத் தோண்டப்பட்ட அனைத்து சாலைகளும் ஓராண்டுக்குள் சீரமைக்கப்படும். பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக தீா்த்திட தனியாகக் குழு அமைக்கப்படும். மக்கள் விரும்பும் ஆட்சி தொடா்ந்திட அதிமுக கூட்டணி வேட்பாளரான எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, ஈரோடு பெரியாா் நகரில் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகா், அதிமுக பகுதி செயலாளா் மனோகரன், தமாகா மாவட்டத் தலைவா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.