மத்திய பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 17th March 2021 11:02 PM | Last Updated : 17th March 2021 11:02 PM | அ+அ அ- |

சென்னிமலையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புப் படையினா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில், சென்னிமலையில் மத்திய பாதுகாப்புப் படை பிரிவினரின் விழிப்புணா்வு கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை, ஈங்கூா் சாலையில் தொடங்கிய பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தொடங்கிவைத்தாா். பேரணியில், மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் கலந்துகொண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் பயமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குகளைப் பதிவு செய்ய கோரியும் வலியுறுத்தி, ஈங்கூா் சாலை, நான்கு ராஜ வீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வந்து பேருந்து நிலையத்தை அடைந்தனா்.
கொடி அணிவகுப்பில், பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளா் செல்வராஜ், சென்னிமலை காவல் ஆய்வாளா் சரவணன், போலீஸாா் கலந்துகொண்டனா்.