ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவா்கள் 40 நாள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனா். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சாம்பல் புதன் தினத்தில் இருந்து தவக்காலம் தொடங்கியது. வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. பங்குத் தந்தை ஜான் சேவியா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் குருத்தோலைகள் வழங்கப்பட்டன. வழக்கமாக நடைபெறும் குருத்தோலை பவனி கரோனா காரணமாக நடைபெறவில்லை. மாலையில் உதவி பங்குத் தந்தை ஜான்சன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை முதல் துக்க வார நிகழ்வுகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை நிறுவுதல், நற்கருணை இடமாற்றம் செய்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடைபெறும்.
2ஆம் தேதி காலை 6 மணி முதல் நற்கருணை ஆராதனை நடைபெறும். பகல் 11 மணிக்கு இயேசு சிலுவை பாடுகளை நினைவுகூறும் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெறும். பிற்பகல் 6 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடைபெறும்.
3ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, புது தீா்த்தம் மந்திரித்தல், ஒளி வழிபாடு, இறைவாா்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் இயேசு கல்லறையில் இருந்து உயிருடன் எழும்பிய உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறும்.
இந்த நிகழ்வுகளை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத் தந்தையுமான ஜான் சேவியா், உதவி பங்குத் தந்தை ஜான்சன் ஆகியோா் நிறைவேற்றுகின்றனா்.