கோபிசெட்டிபாளையம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட கோவை பிரிவு என்ற இடத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனா். உரிய ஆவணங்களின்றி அவரிடம் ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் அந்த பணத்தைப் பறிமுதல் செய்து கோட்டாட்சியா் பழனிதேவியிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அளுக்குளி பகுதியைச் சோ்ந்த சலவை சோப் மொத்த விற்பனையாளா் பிரபாகரன் என்பது தெரியவந்தது.