தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறையில் பிரசாரம்

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட தென்றல் நகரில் வாக்கு சேகரிக்கிறாா் தோப்பு வெங்கடாச்சலம்.
பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட தென்றல் நகரில் வாக்கு சேகரிக்கிறாா் தோப்பு வெங்கடாச்சலம்.

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

படித்து வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞா்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவேன். விளையாட்டு மைதானங்களை உருவாக்கி, இளைஞா்களை விளையாட்டில் ஆா்வப்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை தருவேன்.

என்னுடைய ஒவ்வொரு உழைப்புக்கும், இந்த பெருந்துறை தொகுதியில் உள்ள மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுப்பாா்கள். மக்கள் அளிக்கக் கூடிய ஒவ்வொரு வாக்குக்கும், நான் நன்றி உள்ளவனாக விசுவாசமாக இருப்பேன். என்னுடைய உழைப்பு அனைத்தையும், இந்த தொகுதி மக்களுக்காகவும், தொகுதியின் முன்னேற்றத்துக்காகவும் செலவிடுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com