சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், தோ்தல் பாதுகாப்பு குறித்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
அணிவகுப்புக்கு, பெருந்துறை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், பெருந்துறை போக்குவரத்துக் காவல் ஆய்வாளா்கள், போலீஸாா், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் என 285 போ் கலந்துக் கொண்டனா்.
ஊா்வலமானது, பெருந்துறை புதிய பேருந்து நிலையம், ராஜவீதி, அரசு மகளிா் பள்ளி, குன்னத்தூா் நால்ரோடு, பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ரவுண்டானா, காவல் நிலையம் ரவுண்டானா, பங்களா வீதி வழியாகச் சென்று பெருந்துறை அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது.