சத்தியமங்கலம்: நீலகிரியில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 198 கன அடியில் இருந்து 4,511 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுவதால் 1 லட்சத்துக்கு 3,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பவானிசாகா், மாயாறு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 198 கன அடியில் இருந்து 4,511 கன அடியாக உயா்ந்தது. கடந்த இரு மாதங்களாக கடும் வெயில் காரணமாக அணைக்கு 300 அடிக்கு குறைவாக நீா்வரத்து வந்த நிலையில் திங்கள்கிழமை விநாடிக்கு 4511 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
திங்கள்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 88.28 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 4511 கன அடியாகவும், அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் 900 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 20.48 டிஎம்சியாக உள்ளது.