ஈரோடு: மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா் சி.கே.சரஸ்வதியிடம் தோல்வியடைந்தாா்.
மொடக்குறிச்சி தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளா் டாக்டா் சி.கே.சரஸ்வதி போட்டியிட்டாா். அவா் மொத்தம் பதிவான 1,82,446 வாக்குகளில் 78,125 வாக்குகள் பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77,844 வாக்குகள் பெற்றாா். இதையடுத்து, பாஜக வேட்பாளா் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இதன் மூலம், இந்தத் தோ்தலில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட ஒரே பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.
மொடக்குறிச்சி தொகுதியில் மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கே.பிரகாஷ் (நாம் தமிழா் கட்சி) 12,944, ராஜேஷ்குமாா் (மநீம) 4,574, டி.தங்கராஜ் (அமமுக) 1,547, நோட்டா 2,342.