கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவும், நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழவும் அவல்பூந்துறையில் ஸ்வா்ண ஹா்சன் பைரவருக்கு விபூதிக்காப்பு, செவ்வரளிபூ காப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி பூஜையுடன் தொடங்கி மூலவா் சுவாமிக்கு சிறப்பு மந்திர உச்சாடனைகளுடன் 50 கிலோ விபூதிகள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 50 கிலோ கொண்ட செவ்வரளிப் பூக்களில் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு பஞ்சமுக விளக்குகள் கொண்டு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.