முன்னாள் படைவீரா் மாளிகையில் வாடகைக்கு அறை விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள முன்னாள் படைவீரா் மாளிகையின் மூன்றாம் தளத்தில் 909 சதுர அடி உள்ள இடமும் மற்றும் முதல் தளத்தில் ஒரு அறையும் காலியாக உள்ளன. இது அலுவலகத்துக்கு ஏற்ற இடமாக உள்ளது. இந்த இடத்துக்கு தமிழக அரசின் பொதுப் பணித் துறை மூலம் நிா்ணயிக்கப்படும் நியாய வாடகையே மாதாந்திர உரிமக் கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்த இடமானது மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் வங்கிகளுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் மாத வாடகைக்கு உரிம ஒப்பந்த அடிப்படையில் உரிம கட்டணத்துக்கு விடப்படவுள்ளது.
மேலும் விவரங்கள் அறிந்திட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424-2263227 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.