வீட்டின் பூட்டை உடைத்து நகை, மடிக்கணினிகள் திருட்டு

கோபிசெட்டிபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, மடிக் கணினிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோபிசெட்டிபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, மடிக் கணினிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோபிசெட்டிபாளையம், நாகமலை எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன்(35). இவா் வேலூரில் உள்ள ஆயில் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வாரம் ஒருமுறை மட்டுமே கோபியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வாா்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 20ஆம் தேதி சரவணனைப் பாா்ப்பதற்காக அவரது மனைவி கெளசல்யா மகனுடன் வேலூா் சென்றாா். பின்னா் ஏப்ரல் 30ஆம் தேதி குடும்பத்தினா் கோபி திரும்பினா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, 2 மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com