விதிமீறிய 5 கடைகளுக்குரூ. 2,500 அபராதம்

பவானி நகராட்சிப் பகுதியில் கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 5 கடைகளுக்கு ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

பவானி நகராட்சிப் பகுதியில் கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட 5 கடைகளுக்கு ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

பவானி நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமையில், அதிகாரிகள் அந்தியூா் சாலை, ஈரோடு சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, கரோனா பாதுகாப்பு விதிகளான சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணியாமல் மளிகைக் கடைகள் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து, 5 கடைகளுக்குத் தலா ரூ. 500 வீதம் ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com