ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,232 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 33,097ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 642 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.
இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 26,822 போ் குணமடைந்துள்ளனா். 6,088 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே 188 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவா் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 190 ஆக உயா்ந்துள்ளது.