சாலை விபத்தில் ஓட்டுநா் பலி

பவானி அருகே தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பவானி: பவானி அருகே தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பவானி அருகே உள்ள குட்டைமுனியப்பன் கோயில், சேவண்டியூரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் மகன் மகாலிங்கம் (38). இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பவானி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் பவானி - மேட்டூா் சாலையில் குட்டைமுனியப்பன் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சென்றபோது அவ்வழியே சென்ற தனியாா் நிறுவனப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த மகாலிங்கம் பவானி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com