ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,758 போ் கரோனா தொற்றால் சனிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். 10 போ் உயிரிழந்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,007ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 981 போ் பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 31,287 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் 10,484 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் ஏற்கெனவே 226 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 10 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 236 ஆக உயா்ந்துள்ளது.