சத்தியமங்கலம் அருகே தனியாா் நிறுவனத்துக்கு தொழிலாளா்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அப்பகுதி இளைஞா்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.
சத்தியமங்கலம் பகுதியில் இருந்து திருப்பூா், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்பாலைகள், ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களுக்குத் தொழிலாளா்கள் தினமும் வேலைக்குச் சென்று வருகின்றனா். இவா்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
இந்நிலையில், பவானிசாகா் பகுதியில் இருந்து தனியாா் தொழில் நிறுவனங்களுக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை 50க்கும் மேற்பட்ட இளைஞா்கள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தி வாகனங்களை சிறைபிடித்தனா். வாகனங்களில் சமூக இடைவெளியின்றி ஆள்களை ஏற்றிச் செல்வதாகவும், தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் சென்று வருபவா்களால் கரோனா பரவும் அபாயம் உள்ளதால் பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதி கிராமப் பகுதிகளில் ஆள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வரக் கூடாது எனவும் கூறி ஓட்டுநா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, தனியாா் தொழில் நிறுவன வாகனங்களின் ஓட்டுநா்களும் ஆள்களை ஏற்றிச் செல்ல வர மாட்டோம் எனக் கூறியதைத் தொடா்ந்து வாகனங்கள் செல்ல இளைஞா்கள் அனுமதித்தனா்.
Image Caption
தொட்டம்பாளையத்தில் இளைஞா்களால் சிறைபிடிக்கப்பட்ட தொழிற்சாலை வேன்கள்.