ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,656 போ் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். 11 போ் உயிரிழந்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,254ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 812 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 30,306 போ் குணமடைந்துள்ளனா். 9,722 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே 216 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 11 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 227ஆக உயா்ந்துள்ளது.