ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 1,743 போ் சனிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், ஒரே நாளில் 7 போ் உயிரிழந்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53,144ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,301 போ் பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 38,426 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் 14,400 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 311 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 318ஆக அதிகரித்துள்ளது.