ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,784 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 22 போ் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54,914ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 941 போ் பூரண குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 39,367 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களிலும் 15,207 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 318 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், மேலும் 22 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 340ஆக அதிகரித்துள்ளது.