அந்தியூா் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அந்தியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உறவினா்களான இரு மாணவியா் 11ஆம் வகுப்பு படித்து வந்தனா். இந்நிலையில், ஒரு மாணவியின் தாய், மற்றொரு மாணவியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு முறைகேடாகப் பேசியுள்ளாா். இதனால், மனமுடைந்த அம்மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, செவ்வாய்க்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மேலும், அவா் எழுதிய கடிதத்தில் தஞ்சாவூரைச் சோ்ந்த ரஞ்சித், அருண், தினேஷ் ஆகியோா் தனது மரணத்துக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸாா் கைப்பேசியில் அவதூறாகப் பேசிய மற்றொரு மாணவியின் தாய் உள்பட நால்வா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.