அந்தியூரில் கன மழை: வீடு இடிந்து சேதம்

அந்தியூரில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் செவ்வாய்க்கிழமை இரவு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
கன மழை காரணமாக  இடிந்து  விழுந்த  வீடு.
கன மழை காரணமாக  இடிந்து  விழுந்த  வீடு.

அந்தியூரில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் செவ்வாய்க்கிழமை இரவு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

அந்தியூா் தவிட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (52). கைத்தறி நெசவுத் தொழிலாளியான இவருடன், மனைவி, இரு மகள்கள், மாமனாா் முருகன் ஆகியோா் வசித்து வருகின்றனா். இவா், வீட்டிலேயே பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தாா். சுற்று வட்டாரப் பகுதியில் தொடா்ந்து பெய்து வந்த கன மழையால் இவரது ஓட்டு வீடு செவ்வாய்க்கிழமை இரவில் இடிந்து விழுந்தது.

முன்னதாக, ஓடுகள் சரியும் சப்தம் கேட்டதால் ஈஸ்வரன் உள்பட ஐந்து பேரும் வீட்டைவிட்டு வெளியே தப்பியோடியதால் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

இந்நிலையில், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், வட்டாட்சியா் விஜயகுமாா், அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் ரவி, அலுவலா்கள் சம்பவ இடத்தை புதன்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com