வாகனத் திருட்டு வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் கைது: 25 வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 25 இருச்சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 25 இருச்சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு தாலுகா போன்ற காவல் நிலைய எல்லைகளில் கடந்த சில மாதங்களாக ஏராளமான இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடப்பட்டு வந்தன. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், ஈரோடு கிருஷ்ணா தியேட்டா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குற்றப் பிரிவு போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியாக ஆட்டோ ஓட்டுநா் உடையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது அவா் ஓட்டி வந்தது திருட்டு இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது.

போலீஸாா் தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபா் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் தோ்முட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் காக்கிச்சட்டை (எ) முருகேசன் (47) என்பதும், தற்போது ஈரோடு சாஸ்திரி நகா் பாப்பாங்காட்டில் வசித்து வருவதும், ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடி கா்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, முருகேசனை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 25 இருசக்கர வானங்களைப் பறிமுதல் செய்தனா். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com