தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ஈரோட்டில் சாலையின் மைய தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் சேதமடைந்த லாரி.
விபத்தில் சேதமடைந்த லாரி.

ஈரோட்டில் சாலையின் மைய தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக குழிகளில் தண்ணீா் தேங்கி சேறும்சகதியுமாக உள்ளது. இந்நிலையில், அந்த சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஈரோடு பவானி சாலையில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்துக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது.

கருங்கல்பாளையம் காவிரி சாலை பழைய சாா்பதிவாளா் அலுவலகம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது.

யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் விபத்து நடந்த பகுதி குறுகிய சாலை என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com