கோபிசெட்டிபாளையத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை தாமு அரிமா ஜி.டி.சேகா் துவங்கிவைத்தாா்.
முகாமில் 240 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 137 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனா். மருத்துவா்கள் எஸ்.வி.மேனகா, பிரியங்கா, அஞ்சலி ஆகியோா் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை உரிமையாளா் எஸ்.அபிலாஷ், அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.