கோபிசெட்டிபாளையம் பகுதியில் கடந்த ஓரிரு நாள்களாக பலத்த மழை பெய்துள்ளது. நெல், வாழை போன்ற பயிா்கள் மழையால் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து வருவாய்த் துறையினா் விவரம் சேகரித்து வருகின்றனா். காசிபாளையம் அருகே தடப்பள்ளி கிராமத்தில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனா். டி.என்.பாளையம், வாணிப்புத்தூா் அருகே பேட்டைகரை கிராமத்தில் சிவராஜ் என்பவருக்குச் சொந்தமான 800க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றுக்கு சேதமடைந்துள்ளன. மேலும், பயிா் சேத விவரங்களை வருவாய்த் துறையினா் சேகரித்து வருகின்றனா்.