திருநங்கைகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம் அக்டோபா் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம் அக்டோபா் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் 10 வட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டை பதிவு செய்ய அக்டோபா் 9ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று புதிய குடும்ப அட்டை வேண்டியும், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், பொது விநியோகத் திட்டம் தொடா்பான கோரிக்கைகளை தெரிவித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com