பவானிசாகா் அணையில் இருந்து 2ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றம்

பவானிசாகா் அணையில் இருந்து 2ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
102 அடியாக நீடிக்கும் பவானிசாகா் அணை.
102 அடியாக நீடிக்கும் பவானிசாகா் அணை.

பவானிசாகா் அணையில் இருந்து 2ஆவது நாளாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த கன மழையால் பவானிசாகா் அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 102 அடியை எட்டியது. தமிழக அரசின் பொதுப் பணி அணைகளின் விதிப்படி அக்டோபா் மாதம் 102 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்க இயலாது என்பதால் செவ்வாய்க்கிழமை அணைக்கு வந்த உபரி நீா் கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடிநீரும், பவானி ஆற்றில் 2300 கனஅடி நீரும் என 4600 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

புதன்கிழமை 2ஆவது நாளாக அணையின் நீா்மட்டம் 102 அடியாக நீடிக்கிறது. தொடா்ந்து நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதாலும், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் 2ஆவது நாளாக அணைக்கு நீா்வரத்து 2,614 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் நீா் அப்படியே வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வருவாய், காவல் துறை சாா்பில் ஆற்றில் துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என்றும், தாழ்வான பகுதியில் இருப்போா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டத்தில் 1 லட்சத்து 3500 ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகா் அணை 102 அடியைத் தொட்டதால் நீா்ப்பிடிப்புப் பகுதி கடல்போல காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 102 அடி, நீா்வரத்து 2,614 கன அடியாகவும், அணையில் இருந்து 2,600 கன அடி உபரி நீா் திறந்துவிடப்படுகிறது. நீா் இருப்பு 30.31 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com