பெருந்துறை நகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவியாக ஃபெடரல் வங்கியின், ஹாா்மிஸ் மெமோரியல் பவுண்டேஷன் சாா்பில், பெருந்துறை காவல் நிலையத்துக்கு 10 பேரிகாா்டுகள் நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஃபெடரல் வங்கியின் ஈரோடு மண்டல மேலாளா் நபின் சாலைத் தடுப்புகளை, பெருந்துறை காவல் உதவி கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் வழங்கினாா்.
இதில், வங்கியின் பெருந்துறை கிளை மேலாளா் வெங்கடேஷ், பெருந்துறை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் ராஜன், மகேந்திரன், விஜயராகவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.